போட்டோ ஷூட்டில் இலக்கியம்பேசிய கமல்ஹாசனும் பிரகாஷ்ராஜும்.

கமலின் அடுத்த படமான தூங்காவனம் பட போட்டோ ஷூட் முடிந்த உற்சாகத்தில் இருகிறார். இப்படத்தினை கமலின் உதவியாளராக இருந்த ராஜேஷ்  இயக்குகிறார். இசை ஜிப்ரான்.

இப்படத்திற்கான போட்டோ ஷூட் தற்பொழுது சென்னையில் நடந்து முடிந்துள்ளது. கமல் , பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். போட்டோ ஷூட்டில் கமல்ஹாசனும் பிரகாஷ்ராஜும் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றி இருவரும் தங்களுடைய சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

“தூங்காவனம் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறோம். முதலாவதாக போட்டோ ஷூட் சிறப்புடன் முடிந்த மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த டீமும் இருக்கிறது. படத்திற்கான முதல் பார்வைக்காக விரைவில் வெளியாகும்” என்று ட்விட் செய்துள்ளார் கமல்ஹாசன். 

பிரகாஷ்ராஜும் தன்னுடைய சமுக வலைதளத்தில், “ டே வித் லெஜண்ட் கமல்ஹாசன். எங்கள் படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. இதற்கு நடுவே நாங்கள் இலக்கியம், படங்கள், வாழ்க்கை என்று அனைத்தையும் பகிர்ந்துகொண்டோம்” என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன் உடன் த்ரிஷா, மனிஷா கொய்ராலா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top