”வாய்மை” ஆங்கில படத்தின் தழுவலா? வரவேற்கவேண்டிய நல்ல விஷயமே...!

சாந்தனு பாக்யராஜ், அவரின் தாயார் பூர்னிமா பாக்யராஜ், கவுண்டமணி, பானு, ராம்கி, தியாகராஜன் ஆகியோர் நடிக்க, செந்தில் குமார் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கதில் வெளிவரவிருக்கும் படம்தான் ”வாய்மை”.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது அதை பார்க்கும் பொழுது 1957ல் வெளிவந்து ”12 ஆங்ரி மென்” ( 12 angry men ) என்ற ஆங்கில படத்தின் தழுவலோ என்ற சந்தேகம் பரவலாக பேசப்படுகிறது.

12 ஆங்ரி மென்னின் கதை என்னவென்றால் ஒரு 18 வயது சிறுவன் தன் தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருப்பார். அச்சிறுவன் தான் குற்றவாளியா? தண்டனையை நிறைவேற்றலாமா? என்று 12 பேர் கொண்ட சட்ட நிபுணக்குழு ஒன்று தான் தீர்மானிக்கும்.

அதில் 11 பேர் அவன் குற்றவாளிதான் என்றும், ஒருவர் மட்டும் அவன் நிரபராதி என்றும் சொல்வார்கள், பிறகு அச்சிறுவன் குற்றவாளி இல்லை என்று ஆணித்தரமாக நம்பும் ஒருவர் எப்படி மற்ற 11 நபர்களையும் ஒத்துகொள்ள வைக்கிறார் என்பதுதான் கதை.

இப்படம் காலங்களை தாண்டி போற்றப்படும் படங்களில் ஒன்று! ”வாய்மை”யின் டிரெய்லரும் இதுபோலதான் உள்ளது!

ஏதேதோ மொழிகளில் வெளியான படங்களின் கதைகளை உருவி பல படங்கள் தமிழில் வந்துள்ளன, அதை மக்களும் வரவேற்றிருக்கிறார்கள். ஒரு வார்த்தையால் ஒரு உயிர் போய்விடக்கூடாது என்ற மகத்தான கருத்தை வழியுருத்திய 12 ஆங்ரி மென் போன்ற படத்தை ரீமேக் செய்வது நல்ல விஷயமே! 

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top