
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக இளையராஜா 10 ஊர்களில் இசை நிகழ்ச்சி நடத்தி தர முன்வந்திருக்கிறார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் சில வெளிநாட்டு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த தகவல் வெளியிடப்பட்டு. இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை நடத்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை கொண்ட வளர்ச்சி நிதி குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment