தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒன்று பாடல்கள், அந்த பாடல்களின் மூலம் நம் சந்தோஷம், துக்கம் என அனைத்தையும் பங்கு கொள்பவர்கள் தான் பாடகர்கள். அப்படி தொடந்து பல வருடங்களாக தன் குரலால் ரசிகர்களின் மனதில் இசை சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
இவர் தெலுங்கு தேசத்தில் இருந்து இசை ஆர்வத்தால் கோலிவுட்டை நோக்கி பயணிக்க தன் முதல் படமே யாருக்கும் கிடைத்திராத பாக்கியமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆயிரம் மலரே வா பாடலை பாடி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
அதை தொடந்து தற்போது வரை இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்தில் ஆரம்பித்து சல்மான் கான், சிரஞ்சீவி, மோகன் லால், மம்முட்டி என இவர் பாடலுக்கு வாய் அசைக்காத நடிகர்களே இல்லை என்று கூறி விடலாம்.
ஒரு பாடகராக மட்டுமில்லாமல் பண்முகம் கொண்ட இவர் பல படங்களில் இசையமைப்பளாராகவும் பணியாற்றியுள்ளார். திரைக்கு பின்னால் இருந்த இவரை மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி, ப்ரியமாணவளே, உல்லாசம், குணா போன்ற பல படங்கள் சிறந்த நடிகனாகவும் அடையாளம் காட்டியது.
இன்று தமிழகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடு தல அஜித்தை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான் என்றால் நம்புவிர்களா, ஆமாம், இயக்குனர் செல்வா தன் அமராவதி படத்திற்கு புதுமுகம் தேடிய போது இவர் தான் அஜித்தை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது.
இவர் இதுநாள் வரை 1000 கணக்கான பாடல்களையும், எண்ணிலடங்கா விருதுகளையும் பெற்றுள்ளார். ‘என்று என் குரல் தளர்கிறதோ அன்று நான் பாடுவதை நிறுத்தி விடுவேன்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதிலிருந்தே தெரிகிறது எஸ்.பி,பி க்கு நகைச்சுவை உணர்வும் அதிகம் தான் போல...இவரின் சாதனை பயணங்கள் தொடர்ந்து நம்மை மேலும் ..மேலும் அவருடைய குரலால் உற்சாகப்படுத்த இவரின் பிறந்தநாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.
இவர் மட்டுமின்றி பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்த கதாநாயகிகளில் ஒருவரான ப்ரியாமணிக்கு இன்று தான் பிறந்தநாள். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், பருத்திவீரன் படத்தில் இவர் ஏற்ற முத்தழகு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இதற்காக இவருக்கு அந்த வருடத்தின் சிறந்த நடிகை என்ற தேசிய விருது கூட கிடைத்தது.
மேலும் ஹாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜுலி அவர்களுக்கும் இன்று பிறந்தநாள். இவர் தான் ஒரு நடிகை நடித்தால் மட்டும் போதும் என்றில்லாமல் பல ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வருகின்றார், இது மட்டுமின்றி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதிலிருந்து மீண்டும் புதிய வாழ்விற்கு திரும்பி பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர் தெலுங்கு தேசத்தில் இருந்து இசை ஆர்வத்தால் கோலிவுட்டை நோக்கி பயணிக்க தன் முதல் படமே யாருக்கும் கிடைத்திராத பாக்கியமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆயிரம் மலரே வா பாடலை பாடி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.
அதை தொடந்து தற்போது வரை இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்தில் ஆரம்பித்து சல்மான் கான், சிரஞ்சீவி, மோகன் லால், மம்முட்டி என இவர் பாடலுக்கு வாய் அசைக்காத நடிகர்களே இல்லை என்று கூறி விடலாம்.
ஒரு பாடகராக மட்டுமில்லாமல் பண்முகம் கொண்ட இவர் பல படங்களில் இசையமைப்பளாராகவும் பணியாற்றியுள்ளார். திரைக்கு பின்னால் இருந்த இவரை மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி, ப்ரியமாணவளே, உல்லாசம், குணா போன்ற பல படங்கள் சிறந்த நடிகனாகவும் அடையாளம் காட்டியது.
இன்று தமிழகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடு தல அஜித்தை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர் தான் என்றால் நம்புவிர்களா, ஆமாம், இயக்குனர் செல்வா தன் அமராவதி படத்திற்கு புதுமுகம் தேடிய போது இவர் தான் அஜித்தை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது.
இவர் இதுநாள் வரை 1000 கணக்கான பாடல்களையும், எண்ணிலடங்கா விருதுகளையும் பெற்றுள்ளார். ‘என்று என் குரல் தளர்கிறதோ அன்று நான் பாடுவதை நிறுத்தி விடுவேன்’ என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதிலிருந்தே தெரிகிறது எஸ்.பி,பி க்கு நகைச்சுவை உணர்வும் அதிகம் தான் போல...இவரின் சாதனை பயணங்கள் தொடர்ந்து நம்மை மேலும் ..மேலும் அவருடைய குரலால் உற்சாகப்படுத்த இவரின் பிறந்தநாளான இன்று சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.
இவர் மட்டுமின்றி பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்த கதாநாயகிகளில் ஒருவரான ப்ரியாமணிக்கு இன்று தான் பிறந்தநாள். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், பருத்திவீரன் படத்தில் இவர் ஏற்ற முத்தழகு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இதற்காக இவருக்கு அந்த வருடத்தின் சிறந்த நடிகை என்ற தேசிய விருது கூட கிடைத்தது.
மேலும் ஹாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜுலி அவர்களுக்கும் இன்று பிறந்தநாள். இவர் தான் ஒரு நடிகை நடித்தால் மட்டும் போதும் என்றில்லாமல் பல ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வருகின்றார், இது மட்டுமின்றி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதிலிருந்து மீண்டும் புதிய வாழ்விற்கு திரும்பி பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment