முற்றுப்பெறாமல் இழுத்துக் கொண்டே போகிறது – லிங்கா பட சர்ச்சை.
தன் படத்தினால் நஷ்டப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஜினி செய்த உதவி, இப்போது அவருக்கே எதிராக திரும்பி அவரது இமேஜை காலி பண்ணிக் கொண்டிருக்கிறது.
ரஜினி தரப்பில் கொடுத்ததாக சொல்லப்பட்ட 12.5 கோடி பணம் முழுமையாக கொடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி வருகிறார்கள்.
12.5 கோடியில் பெரும்பாலான ஏரியாக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை வழங்கப்பட்டுவிட்டது.
வட ஆற்காடு தென் ஆற்காடு போன்ற சில ஏரியாக்களின் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் மொத்தப் பணத்தையும் தங்களுக்கு மட்டுமே தர வேண்டும் என்று சொல்கிறார்கள். தியேட்டர்காரர்கள் மற்றும், விநியோகஸ்தர்கள் இரண்டு தரப்பினரும் ஒருமித்த முடிவு எடுத்து இணைந்து வந்தால் அவர்களுக்கான பணத்தைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக தாணு தரப்பு சொல்கிறது.
இந்நிலையில், லிங்கா விநியோகஸ்தர்களில் சிலரும், சில ஏரியாக்களில் எம்.ஜி.அடிப்படையில் லிங்கா படத்தைத் திரையிட்டவர்களும் ஒன்று கூடி, ‘ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சனையில் ரஜினி தலையிட்டு பாக்கி பணத்தைத் தர வேண்டும். இல்லை என்றால், 13.06.2015 அன்று ரஜினி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்’ என அறிவித்தனர்.
இதற்கு ரஜினி தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் வராது என்பதை அறிந்தோ என்னவோ, அடுத்த அஸ்திரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் கையில் எடுக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
அதாவது இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர், தற்கொலை முயற்சியில் ஈடுபட இருக்கிறார் என்பதே அந்தத் தகவல்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ரஜினி மற்றும் தாணுவுக்கு சிங்காரவேலன் பேசுவதுபோல் சென்ட்டிமென்ட்டான உரை ஒன்று தயார் பண்ணப்பட்டுள்ளதாகவும் கேள்வி.
ஏறக்குறைய அவரது மரண வாக்குமூலம் போன்று தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஆடியோ திரைத்துறையினர் மத்தியில் வாட்ஸ்அப்பில் படு வேகமாக பரவி வருகிறது.
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, லிங்கா படத்தில் உரிய நஷ்டஈடு கிடைக்காததினால் சிங்காரவேலன் தற்கொலை முயற்சி என விரைவில் ஒரு பரபரப்பு செய்தி வரலாம்.
வாயில்நுரை தள்ளியநிலையில் சிங்காரவேலன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சிகளையும் தொலைக்காட்சியில் காண நேரலாம்.
தன் படத்தினால் நஷ்டப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஜினி செய்த உதவி, இப்போது அவருக்கே எதிராக திரும்பி அவரது இமேஜை காலி பண்ணிக் கொண்டிருக்கிறது.
ரஜினி தரப்பில் கொடுத்ததாக சொல்லப்பட்ட 12.5 கோடி பணம் முழுமையாக கொடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி வருகிறார்கள்.
12.5 கோடியில் பெரும்பாலான ஏரியாக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை வழங்கப்பட்டுவிட்டது.
வட ஆற்காடு தென் ஆற்காடு போன்ற சில ஏரியாக்களின் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் மொத்தப் பணத்தையும் தங்களுக்கு மட்டுமே தர வேண்டும் என்று சொல்கிறார்கள். தியேட்டர்காரர்கள் மற்றும், விநியோகஸ்தர்கள் இரண்டு தரப்பினரும் ஒருமித்த முடிவு எடுத்து இணைந்து வந்தால் அவர்களுக்கான பணத்தைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக தாணு தரப்பு சொல்கிறது.
இந்நிலையில், லிங்கா விநியோகஸ்தர்களில் சிலரும், சில ஏரியாக்களில் எம்.ஜி.அடிப்படையில் லிங்கா படத்தைத் திரையிட்டவர்களும் ஒன்று கூடி, ‘ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சனையில் ரஜினி தலையிட்டு பாக்கி பணத்தைத் தர வேண்டும். இல்லை என்றால், 13.06.2015 அன்று ரஜினி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்’ என அறிவித்தனர்.
இதற்கு ரஜினி தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் வராது என்பதை அறிந்தோ என்னவோ, அடுத்த அஸ்திரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் கையில் எடுக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது.
அதாவது இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர், தற்கொலை முயற்சியில் ஈடுபட இருக்கிறார் என்பதே அந்தத் தகவல்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ரஜினி மற்றும் தாணுவுக்கு சிங்காரவேலன் பேசுவதுபோல் சென்ட்டிமென்ட்டான உரை ஒன்று தயார் பண்ணப்பட்டுள்ளதாகவும் கேள்வி.
ஏறக்குறைய அவரது மரண வாக்குமூலம் போன்று தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஆடியோ திரைத்துறையினர் மத்தியில் வாட்ஸ்அப்பில் படு வேகமாக பரவி வருகிறது.
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, லிங்கா படத்தில் உரிய நஷ்டஈடு கிடைக்காததினால் சிங்காரவேலன் தற்கொலை முயற்சி என விரைவில் ஒரு பரபரப்பு செய்தி வரலாம்.
வாயில்நுரை தள்ளியநிலையில் சிங்காரவேலன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் காட்சிகளையும் தொலைக்காட்சியில் காண நேரலாம்.
0 comments:
Post a Comment