நாடக கலையில் இருந்து தான் சினிமா செல்லுலாயிடாக உருவெடுத்தது, அன்றிலிருந்தே ஒரு விஷயத்தை நம் மக்களுக்கு புரிய வைக்க, சினிமாத்தனம் என்று கூறப்படும் ஒரு பார்முலாவில் தான் அனைவரும் படமெடுத்து வந்தார்கள்.
ஆனால், முதல் முறையாக அளவான, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி என அனைத்தையும் புதிய வடிவில் இந்திய சினிமாவிற்கே அடையாளம் காட்டியவர் தான் மணி ரத்னம்.
ஆரம்பகாலத்தில் கீதாஞ்சலி, பகல் நிலவு, இதயக்கோவில், மௌனராகம் என திரையில் அமைதியின் அர்த்தத்தை படமாக்கி கொண்டு, திரைக்கு வெளியே தமிழ் சினிமாவில் பல க்ளிஷேவ் காட்சிகளை வன்முறையாக அறுவடை செய்தவர்.
நாயகர்கள் கதைகள் தேவையில்லை, கதைக்குள் தான் நாயகன் வேண்டும் என்று உலக நாயகனுடன் கைகோர்த்து இவர் இயக்கிய நாயகன் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.
80 மற்றும் 90 களில் மாஸ் என்றால் ரஜினி என்று அகராதியில் இடம்தான் பெறவில்லை, ஆனால், அவரை கூட கிளாஸ் வகை நடிப்பிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தளபதியின் அழைத்து வந்தவர்.
இந்தியாவையே அச்சுறுத்தும் தீவிரவாதத்தை பற்றி அனைவரும் பேச கூட தயங்கிய போது, ரோஜா, உயிரே என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர். உலகமே எப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் ஈழத்து பிரச்சனைகளை ஒரு சிறு குழந்தையின் குரலாக கூறினார்.
இதுபோல் பல சமூக அக்கறை படங்களை மணிரத்னம் இயக்கியிருந்தாலும் காதல் தான் அவரின் எப்போதும் பேவரட், 10 வருடங்கள்க்கு பிறகு வரும் ஜெனரேஷன் காதலை 2000ம் ஆண்டே தன் தொலைநோக்கு பார்வையின் அப்டேட்டால் அலைப்பாயுதே படத்தை இயக்கி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பல படங்கள் தோல்வி தான், அவ்வளவு தான், இந்த ட்ரண்டில் மணிரத்னம் இல்லை என்று கூறியவர்கள் முகத்தில் ஓ காதல் கண்மணி மூலம் தன் காதலால் அறைந்தவர்.
மீண்டும் ரிட்டர்ன் ஆப் கிங்காக தன் 2(வயதில்) இன்னிங்ஸில் அடியெடுத்து வைக்கும் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஆனால், முதல் முறையாக அளவான, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி என அனைத்தையும் புதிய வடிவில் இந்திய சினிமாவிற்கே அடையாளம் காட்டியவர் தான் மணி ரத்னம்.
ஆரம்பகாலத்தில் கீதாஞ்சலி, பகல் நிலவு, இதயக்கோவில், மௌனராகம் என திரையில் அமைதியின் அர்த்தத்தை படமாக்கி கொண்டு, திரைக்கு வெளியே தமிழ் சினிமாவில் பல க்ளிஷேவ் காட்சிகளை வன்முறையாக அறுவடை செய்தவர்.
நாயகர்கள் கதைகள் தேவையில்லை, கதைக்குள் தான் நாயகன் வேண்டும் என்று உலக நாயகனுடன் கைகோர்த்து இவர் இயக்கிய நாயகன் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.
80 மற்றும் 90 களில் மாஸ் என்றால் ரஜினி என்று அகராதியில் இடம்தான் பெறவில்லை, ஆனால், அவரை கூட கிளாஸ் வகை நடிப்பிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தன் தளபதியின் அழைத்து வந்தவர்.
இந்தியாவையே அச்சுறுத்தும் தீவிரவாதத்தை பற்றி அனைவரும் பேச கூட தயங்கிய போது, ரோஜா, உயிரே என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர். உலகமே எப்போது தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் ஈழத்து பிரச்சனைகளை ஒரு சிறு குழந்தையின் குரலாக கூறினார்.
இதுபோல் பல சமூக அக்கறை படங்களை மணிரத்னம் இயக்கியிருந்தாலும் காதல் தான் அவரின் எப்போதும் பேவரட், 10 வருடங்கள்க்கு பிறகு வரும் ஜெனரேஷன் காதலை 2000ம் ஆண்டே தன் தொலைநோக்கு பார்வையின் அப்டேட்டால் அலைப்பாயுதே படத்தை இயக்கி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பல படங்கள் தோல்வி தான், அவ்வளவு தான், இந்த ட்ரண்டில் மணிரத்னம் இல்லை என்று கூறியவர்கள் முகத்தில் ஓ காதல் கண்மணி மூலம் தன் காதலால் அறைந்தவர்.
மீண்டும் ரிட்டர்ன் ஆப் கிங்காக தன் 2(வயதில்) இன்னிங்ஸில் அடியெடுத்து வைக்கும் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment