சென்னை ட்ராபிக் போல எந்த டிவி சேனலை திருப்பினாலும் சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் விளம்பரம் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. நான் சென்னை அமிர்தாவுல
இருக்கேனா இல்லேன்னா துபாய்ல 7 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேன்னானு தெரியல என்று புழங்காகிதம் அடைந்தது போல அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருப்பார் நடிகை ராதிகா.
ஆனால் நிஜத்தில் அந்த ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்றும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை
என்றும் அது தொடர்பாக வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. மேலும், அது நடிகை ராதிகாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனம் என்றும் கூட
தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் விளம்பரத்தில் நடிப்பது போன்ற தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு
விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் நடிகை ராதிகா தனது டிவிட்டர் அக்கவுண்ட்டில் புத்திமதி சொல்லியிருக்கிறார்.
”அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் நன்கு
விசாரித்துக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இருக்கேனா இல்லேன்னா துபாய்ல 7 ஸ்டார் ஹோட்டல்ல இருக்கேன்னானு தெரியல என்று புழங்காகிதம் அடைந்தது போல அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருப்பார் நடிகை ராதிகா.
ஆனால் நிஜத்தில் அந்த ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் அப்படி இல்லை என்றும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை
என்றும் அது தொடர்பாக வீடியோக்களும், போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. மேலும், அது நடிகை ராதிகாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனம் என்றும் கூட
தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் விளம்பரத்தில் நடிப்பது போன்ற தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு
விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் நடிகை ராதிகா தனது டிவிட்டர் அக்கவுண்ட்டில் புத்திமதி சொல்லியிருக்கிறார்.
”அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் நன்கு
விசாரித்துக் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment