ரஜினியின் அடுத்தப்படம் ! நிஜம் ரஜினிக்கே வெளிச்சம்!!

வழக்கம்போலவே ரஜினிகாந்தின் அடுத்தப்படம் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் ஆனாலும் லிங்கா சறுக்கலில் இருந்து இன்னமும் முழுதாய் மீளாத ரஜினி உஷாராகவே இருக்கிறார். ஆதலால், தனது அடுத்தப்படத்தை காட்டி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் யானைவிலை, குதிரை விலை சொல்லி அட்வான்சாகவே காசை வாங்கிப்போட்டு கல்லா கட்டிவிடக்கூடாது...என்பதில் உறுதியாக இருக்கும் சூப்பர்ஸ்டார்., தன்னை வைத்து அடுத்தப்படம் செய்யும் தயாரிப்பாளர் படத்தை முன்கூட்டியே கூறு போட்டு கூவிக்கூவி விநியோகம் செய்து விடக்கூடாது. சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் எனும் ஒரு கண்டிஷனோடு தான் அடுத்தப்படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

அந்த ஒப்பந்தத்தின்படி, ரஜினியின் அடுத்தப்படத்தை ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க இருப்பதாகவும், சுந்தர்.சி. இயக்க இருப்பதாகவும் அருணாச்சலம் படம் வெளிவந்து 18 ஆண்டுகளுக்குப்பின், ரஜினி - சுந்தர். சி. இணைய இருக்கும் இப்படத்திற்கு வரும் 20ம் தேதி முதல் டிஸ்கஷன், ஷூட்டிங் என்று ஒரு தகவல் ஒரு பக்கமும்., மற்றொரு பக்கம்., கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தான் ரஜினியின் அடுத்தப்படம் என்று இன்னொரு தகவலும் வெளிவந்து கோடம்பாக்கத்தை குழப்பிக்கொண்டிருக்கிறது. எது நிஜம்? என்பது வழக்கம்போலவே ரஜினிக்கே வெளிச்சம்!! -

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top